Pages

Saturday, May 31, 2014

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பமான நாள்: ஜுன் 1- 1971

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பமான நாள்: ஜுன் 1- 1971தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 1971-ம் ஆண்டு ஜுன் 1-ந்தேதி ஆரம்பிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1792 - கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. * 1796 - டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. * 1812 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். * 1831 - ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார். * 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிகராகுவாவைக் கைப்பற்றினார். * 1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார். * 1879 - பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான். * 1910 - ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென்முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.

* 1941 - ஈராக், பாக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர். * 1946 - ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். * 1947 - சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது. * 1959 - நிகராகுவாவில் புரட்சி ஆரம்பமானது. * 1962 - நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ப் ஐக்குமன் இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டார். * 1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது. * 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1978 - டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. * 1979 - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது. * 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது. * 1981 - யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது. * 2001 - நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.

0 comments

Post a Comment