இலங்கை இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். 1972-க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. 1972-ம் ஆண்டு மே 22-ந்தேதி ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றப்பட்டது.
இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான துறைமுகம் என்பன புராதன பட்டுப்பாதை காலந்தொட்டு இரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இலங்கை பல சமய, இன, மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.
இலங்கை வளமான பெளத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது பெளத்த படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது.
Monday, May 26, 2014
சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறிய நாள்: மே 22- 1972
Posted by
Anonymous
at
9:25 PM
Tags :
பலதும் பத்தும்


0 comments
Post a Comment