Pages

Thursday, June 12, 2014

2 வயதுக் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்ற கொடூரன்: cctv கமெராவில் சிக்கினான்

கோலாலம்பூரில் உள்ள கோத்தாராஜா அங்காடியில் வைத்து இந்த 2 வயது குழந்தை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில், ஜாலான் ஹிஷாமுடினின் அமைந்துள்ள சுங்கை கிள்ளான் ஆற்றோரத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த இக்குழந்தையின் உடலை எடிஎம் நிலைய பணியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அக்குழந்தையின் உடலானது மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த அங்காடியில் வைத்து இக்குழந்தையை கடத்திய நபர் அங்குள்ள கமெராவில் பதிவாகியுள்ளான்.
அவனது பெயர் சாமிநாதய்யர் முருகேசன் ( 27) என தெரியவந்துள்ளது. இந்நபர் 2 வயது மதிக்கத்தக்க சிறுமி அவளது தாயார் கழிப்பறைக்குச் செல்லும் தருவாயில் அவரது நண்பர்களின் பார்வையில் இருந்தபோது கடத்திச் சென்றுள்ளான்.
கோத்தாராஜா பேரங்காடியிலிருந்து கடத்திச் சென்ற அக்குழந்தையை, சுங்கை கிள்ளான் ஆற்றோரத்தில் வைத்து தலையில் அடித்து, தலை துண்டாகும் வரை கழுத்தறுத்துள்ளான்.
அவனது கொடூர செயலைக் கண்ட பொதுமக்கள் அவனை நெருங்கியபோது, அந்த நபர் ஆற்றில் குதித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிள்ளது.
இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=31668&cat=miracle&sel=current&subcat=8#sthash.RMdPUFuj.dpuf

0 comments

Post a Comment