Pages

Tuesday, June 10, 2014

மரண தண்டனை தீர்ப்பைக் கேட்டும் அசராமல் சந்தோசமாக சிரித்துக் கொண்டிருந்த கைதிகள்!


ரஷ்யாவில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலையாளிகளான ஐந்து நபர்களுக்கு நேற்று மரண தண்டனை வழங்கி ரஷ்ய நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

ஆனால் இந்த தீர்ப்பை கேட்ட ஐந்து குற்றவாளிகளும் ஜாலியாக சிரித்துக்கொண்டே இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அவர்களின் பிறந்தநாள் அன்று Anna Politkovskay என்ற பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலைக்கு காரணமானவர்கள் என ரஷ்ய போலீஸார் ஐந்து குற்றவாளிகளை கைது செய்தனர். உலகம் முழுவதும் பரபரப்பான எதிர்பார்த்த இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி வழங்கினார்.

ஒரு பெண் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்த ஐந்து நபர்களுக்கும் மரண தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை கண்ணாடி ஜன்னலுக்கு உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த குற்றவாளிகள் அனைவரும் சிரித்துக்கொண்டே இந்ததீர்ப்பை தாங்கள் மனதார வரவேற்பதாக கூறினர்.

இவர்களது செய்கை அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

உண்மையில் இந்த ஐந்து குற்றவாளிகளும் Anna Politkovskay கொலைக்கு உடந்தையாக இருந்தாலும், இவர்களை கொலை செய்ய அனுப்பிய கொலைக்கு மூலகாரணமானவனை இன்னும் போலீஸார் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







0 comments

Post a Comment