Pages

Thursday, June 12, 2014

அதிக போதை: தெருவில் வந்த நபரின் உள்ளாடைகளை அவிழ்த்த கலாட்டா செய்த பெண்கள்

பிரித்தானியாவில் பெண் கும்பல் ஒன்று குடித்துவிட்டு தெருவில் இருந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பிரத்தானியாவின் கார்டிஃப் நகர மைய பகுதியில் பல்கலைக்கழக மாணவிகள் சில பெண்கள் சேர்ந்து குடித்து விட்டு, அந்த பாதையில் வந்த நபர் ஒருவரை தாக்கியுள்ளனர்.

பெண் ஒருவர் அவரின் முகத்தில் காலால் எட்டி உதைக்க, மற்றவர்கள் அவரின் கால் சட்டை மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்துள்ளனர்.

இவர்களிடம் அடிவாங்கிய அந்த நபர் காயங்களுடன் தப்பி ஓடிவிட்டார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் பொலிசார், அந்த கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் மாணவிகள் அல்ல, பல்கலைக்கழக மாணவிகளிடம் இருந்து ஆடைகளை வாங்கி வந்து இவ்வாறு நடந்துகொண்டதாக பலர் தெரிவித்துள்ளனர்.








0 comments

Post a Comment