(1).jpg)
தனது பெற்றோரை கவனித்துக்கொள்ள முடியாமல் அவர்களை முதியோர் இல்லங்களில் பிள்ளைகள் விட்டுச்செல்வதும், பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியாமல் பெற்றோர்கள் அவர்களை நடுவீதிகளிள் விட்டுச்செல்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில் சேம்பியா நாட்டைச்சேர்ந்த ருவியல் மார்டன் என்ற பெண் அநாதையான யானைகளை கவனித்து அனைவரின் மனதையும் இடம்பிடித்து கொண்டுள்ளார்.
சேம்பியா நாட்டை சேர்ந்த ரூவியல் மார்டன் (33) என்ற விஞ்ஞான பட்டதாரியான இப்பெண் யானைகளை பார்த்துக் கொள்வதிலும், கவனித்துக்கொள்வதிலும் அதீத ஆர்வம் உள்ளவர்.
இரண்டிலிருந்து மூன்று வயதுடைய 6 யானைக்குட்டிகளின் தாய் ஆபிரிக்காவில் காணாமல் போனதால், அந்த 6 குட்டிகளையும் ஒரு தாயைப்போல இவர் அன்பாக கவனித்து வருகின்றார்.
காயமடைந்த யானைகளுக்கு முதலுதவி, யானைகளுக்கான அதிகூடிய பாதுகாப்பு, அவைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கள், பாலுட்டுதல், அவைகளின் உடல் உள பிரச்சனைகளை கவனித்தல் போன்ற வேலைகளில் மிகவும் கவனமாகவும், சாதூர்யமாக செய்து வருவதுடன் 24 உயிரினங்களை பாதுகாப்பாகவும் அவதானமாகவும் கண்கானித்து வருகிறார்.
மார்டன் பட்டப்படிப்பை முடித்த பின்னர், விலங்கின பாதுகாப்புக்கான பட்டப்படிப்பையும் முடித்துவிட்டு 2008ஆம் ஆண்டு சேம்பியா நாட்டிற்கு வந்தார்.
யானைகளை உயிரோடு பலியாக்குதல், தந்தங்களை திருடுதல் போன்ற செயற்பாடுகளில் இருந்து யானைகளை பாதுகாப்பதற்காக இவர் தற்போது, சேம்பியாவில் தங்கியுள்ளார்.
பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த போதிலும் யானைகளை பராமறிப்பதை நினைக்கும் போது தனக்கு மகிழ்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குடும்பத்தினரை பிரிந்து இருப்பது கூட இவ்வாறான விடயத்தில் கவலையை தராது, சந்தோஷத்தையே தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)

0 comments
Post a Comment