சீனாவில் பாகிஸ்தான் எல்லை பகுதியான ஸின்ஜியாங் மாகாணத்தின் உகியார் முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கு, சாவு வீட்டில் அழவும், திருமணத்தின் போது சிரிக்கவும் கூட பொதுமக்களுக்கு பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.
சீனாவில் இருந்து உகியார் பகுதியை பிரித்து தனி நாடு வழங்கக் கோரி, அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் முஸ்லிம் பயங்கரவாதிகள், ஏற்கனவே டி.வி. நிகழ்ச்சிகளை தடை செய்தல், ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது, பாட்டு பாடுவது மற்றும் நடனமாட தடை விதித்துள்ளனர்.
இது போதாது என்று, தற்போது கூடுதலாக திருமண வீட்டிலும், மகிழ்ச்சியான நேரங்களிலும் சிரித்து மகிழக்கூடாது. சாவு வீட்டிலும் துக்கம் தாங்காமல் அழக்கூடாது என்றும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஸின்ஜியாங் மாகாண ஆளுநர், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சீன அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

0 comments
Post a Comment